news

2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .

பதிப்பக நூல்கள்

href="http://www.panchavarnampathipagam.com பஞ்சவர்ணம் பதிப்பகம்"



நூல்கள்


இரா. பஞ்சவர்ணம் -நூல்கள்


3.தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

4.தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்" 1 "அரசமரம்


5. திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்


6.   "தமிழ் நாட்டுத்தாவரக் களஞ்சியம் வரிசையில்" 2-9 சிறுதானயத் தாவரங்கள்

7. சிறுதானியங்களும் உணவுவகைகளும்  

8  வள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள்

9  தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்" 10 பலா மரம்

10  தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் வரிசையில்" 11 பனைமரம்

11   பனை பாடும் பாடல்

12  திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள்





1.பிரபஞ்சமும் தாவரங்களும்

மூன்றாம் பதிப்பு


பஞ்சவர்ணம்



புத்தக ISBN – 978-81-923771-1-7

பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள்நட்சத்திரங்கள்ராசிகள்திசைகள்) தாவரங்களை இனம் கண்டு 
தமிழ்ஆங்கில தாவர இயல் பெயர்கள்மருத்துவத் தன்மைஎளிதில் அடையாளம் 
காண ஒளி படங்களுடன்வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள்விடுகதைகள்மருத்துவத் தொகைப் பெயர்கள்தலமரமாக உள்ள கோயில் 
மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் 
வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

பிரபஞ்சம் நூல் வெளியீடு

பிரபஞ்சமும் தாவரங்களும்



பிரபஞ்சமும் தாவரங்களும்’ 1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் வெளியிட என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

சிறந்த நூல்

பஞ்சவர்ணம்

1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலுக்கான பரிசுசென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்க திரு இரா. பஞ்சவர்ணம் பெற்றுக்கொண்டார்.என்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள்என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் முன்னிலை வைத்தனர்

சிறந்த நூல் ஆசிரியர்

பஞ்சவர்ணம்


1-7-20011 அன்று 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பிரபஞ்சமும் தாவரங்களும்’ சிறந்த நூலை தொகுத்து வழங்கிய திரு இரா. பஞ்சவர்ணம் அவர்களுக்கு சிறந்த நூல் ஆசிரியருக்காணதொகையை,சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் T.மதிவாணன் அவர்கள் அளிக்கஎன்.எல்.சி தலைவர் திரு அ.ர.அன்சாரி அவர்கள்என்.எல்.சி சுரங்க இயக்குனர் திரு பி.சுரேந்தர்மோகன் மற்றும் சென்னை யுனிவர்சல் பப்ளிஷர் உரிமையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.



பிரபஞ்சமும் தாவரங்களும் மதிப்புரைகள்
    அரிமாநோக்கு

பிரபஞ்சமும் தாவரங்களும்



 தினமணி

பிரபஞ்சமும் தாவரங்களும்



 குங்குமம்

பிரபஞ்சமும் தாவரங்களும்




 தினதந்தி

பிரபஞ்சமும் தாவரங்களும்



திருசக்தி

பிரபஞ்சமும் தாவரங்களும்

பிரபஞ்சமும் தாவரங்களும் இரண்டாம் பதிப்பு


விலை ரூ - 400
பக்கம் - 404




8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் 
கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து 
சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும்இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமானநீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட 
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்

திரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். 
நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர்ச.கு. ஆச்சார்யா,
பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் 
மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் 
முன்னிலை வைத்தனர்

குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

விலை ரூ - 360
பக்கம் - 376

.புத்தக ISBN – 978-81-923771-1-7



சங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக 
குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் 
குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை 
தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்
என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் 
கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 
112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை 
அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் 
(குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 
தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் 
அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல்சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை 
(Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். 
கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 
35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து 
இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் 
இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.



கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்


08.07.2012 அன்று நடைபெற்ற 15-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில்
திரு இரா. பஞ்சவர்ணம் எழுதிய கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் புத்தக வெளியீட்டு 
விழாவில் சென்னை 
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிஅரசரும்
இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான 
திரு அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன 
அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு பி. சுரேந்திரமோகன் 
அவர்கள் பெற்றுக் கொண்டார். உடன் என்.எல்.சி மனிதவள 
இயக்குனர் ச.கு. ஆச்சார்யா பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் 
மற்றும் மணிவாசகம் பதிப்பக உரிமையாளர்

சிறந்த நூல்

பஞ்சவர்ணம்





கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் மதிப்புரைகள்
    
அரிமாநோக்கு
குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்


குங்குமம்
குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்



தினமணி


கபிலரின் குறிஞ்சிப் பாட்டு

தினமலர்

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்


தாவரங்கள்


3.தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்
10.07.2013 அன்று நெய்வேலி நடைப்பெற்ற
16-வது புத்தக் கண்காட்சியில்

 ‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்

என்னும் நூலைசிறந்த நூலாக தேர்வு செய்து
நெய்வேலி பழுப்பு நிலக்கரிநிறுவன
செயல் இயக்குநர் திட்டம் 
மற்றும்வணிக விரிக்கம்
 திரு சொ. செந்தமிழ்ச்செல்வன்
அவர்கள் வெளியீட்டார்.
உடன் கவிஞர் திரு முத்துலிங்கம், ex. MLC
மற்றும் மதுரை மீனாட்சி புத்தக நிலைய 
உரிமையாளர் திரு மீனாட்சிசுந்தரம்.




தொல்காப்பியத் தாவரங்கள்
புத்தக ISBN – 978-81-923771-3-1
விலை ரூ - 360
பக்கம் - 376
"தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்" 
என்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின் 
பெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை)
போர் முறைபோர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு 
அடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(உழிஞைஉன்னம்கரந்தைகாஞ்சிதும்பைநொச்சிபாசி
போந்தைவஞ்சிவாகைவெட்சி)
மருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :
(கடுவேம்பு)
சொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :
(அரைஆண்மரம்ஆல்ஆர்ஆவாரைஇல்லம்உதிமரம்
எகின்ஒடுமரம்கடுகுமிழ்சார்சேமரம்ஞெமைதளா
நமைநெல்பனைபிடாபீர்புளிபூல்மாயாவிசை
வெதிர்வேல்)
வழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :
(காந்தள்)
கூத்துஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :
(வள்ளிவள்ளை)

மரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து

தாவரங்களின் ஆங்கிலப்பெயர்வகைப்பாட்டியல்
தாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள்
தாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல் 
முழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.





தொல்காப்பியத் தாவரங்கள்

தொல்காப்பியத் தாவரங்கள்

பஞ்சவர்ணம்
























































மதிப்புரைகள் 


அரிமாநோக்கு



தொல்காப்பியத் தாவரங்கள்





தினதந்தி


தொல்காப்பியத் தாவரங்கள்


தினமலர்







4.“தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்" 1 "அரசமரம்”
05/07/2014  அன்று நடைபெற்ற
  17வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில்
இரா.பஞ்சவர்ணம் அவர்களின்
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்" 
புத்தக வரிசையில்
முதல் நூலான"அரசமரம்” 
நூல் வெளியிடப்பட்டது


அரசமரம்



புத்தக ISBN – 978-81-923771-6-2
விலை ரூ - 150
பக்கம் - 182
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்"  - "அரசமரம்

     அரச மரத்தின் தாவர விளக்கம், ஆங்கிலப் பெயர்கள்,
பிற மாநில மொழிப் பெயர்கள் -: தமிழ் – Vernacular Names,
ஆங்கிலத்தில், நிகண்டுகள், அகராதிகள்,மருத்துவப் பயன்பாடு, அரசமரத்திலிருந்து
செய்யப்படும் மருந்து வகைகள், தமிழ் இலக்கியங்களில் அரை, அஸ்வத்தம்,
போதி, அரசு என்ற பெயர்களில் வரும் பாடல் அடிகள், வாய்மொழி இலக்கிய
பயன்பாடு -Folk Literature, அரச மரத்தைத் தலமரமாகக் கொண்ட கோயில்கள்,
அரச மரத்தைத் கடவுளின் பெயராகக் கொண்ட கோயில், அரசமரம்
தலமரமாக உள்ள கோயில்களின் விளக்கம், அரச மரத்தைப் பெயரில் கொண்ட
தமிழக ஊர்கள் , அரச மரத்தைப் பெயரில் கொண்ட பிற மாநில ஊர்கள்,
அரசின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற வேறு தாவரங்கள்,
தமிழ் இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள்,
அரசின் பெயரை முன்னொட்டாக கொண்ட மாந்தரின் பெயர்கள்,
பயன்படும் பாகங்கள் - பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகள்,
சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைப்பெயர்கள், ஆங்கில விளக்கம்
மற்றும் கூடுதல் செய்திகளுடன் அரசமரம் பற்றிய முழுமையான
தகவல்களுடன் வெளியிடப்படுகிறது


மதிப்புரைகள்.







அரசமரம்


5. திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்


5/07/2014 அன்று நடைபெற்ற   -   

 நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில்
இரா. பஞ்சவர்ணம் அவர்களின்
திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்
நூல்வெளியிடப்பட்டது





திருமூலர்
புத்தக ISBN – 978-81-923771-4-8
விலை ரூ - 360
பக்கம் - 312



திருமந்திரத் தாவரங்கள்

திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பதிவு செய்யப்பட்டு
ள்ளது.
குறிப்பாக சித்த மருத்துவத் தொகைப் பெயர்களாக வழங்கப்படும்.
காயம் இரண்டு
வெங்காயம் (உள்ளி), பெருங்காயம், இரண்டையும் காயம் இரண்டு என்று
குறிப்பிட்டிருக்கிறார்.
பஞ்சகாயம்
உள்ளி, சுக்கு, திப்பிலி, பெருங்காயம், மிளகு இவற்றைப் பஞ்சகாயம் என்று
குறிப்பிட்டுள்ளார்.
ஐங்காயம்
சுக்கு, மிளகு, திப்பிலி, உள்ளி, காயம் ஆகிய இவைகளை ஐங்காயம் என்று
அந்தந்த தொகைப் பெயர்களிளேயே குறிப்பிடுகின்றார்.
மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு இவற்றின் மருத்துவப் பயன்பாட்டையும் பதிவு
செய்துள்ளார்.
மேலும், பூசைக்குரிய மலராக தாமரை, நீலோற்பலம், செங்கழுநீர், அழகிய கருநெய்தல்,
மணம் விரியும் பூகமும், பூ மாதவி, மந்தாரம், தும்பை, மகிழம்பூ, சுரபுன்னை, மல்லிகை,
சண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய பதினான்கு வகையான நறுமணமிக்கப் பூக்களை
வழிப்பாட்டிற்குரியத் தாவரங்களாகப் பட்டியலிட்டிருக்கின்றார்.
மேலும் நந்தி வழிபாட்டிற்கு நறவ மலரை குறிப்பிட்டுள்ளார்.
ஆன்மிகப் பயன்பாட்டில் ஆலம், கொன்றை, பலாசு, வெண் நாவல், வில்வம் ஆகிய
தாவரங்களும் மந்திரங்கள் எழுதும் பலகையாகவும், ஓலையை வைத்து எழுதும்
பலகையாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பே இல்லாமல் ஞானத்திற்குக் கத்தரியையும், உறுதிப்பாட்டிற்குப் பாகற் காயையும்
,தத்துவ ஆராய்ச்சிக்குப் பூசணியையும், பிறவிப்பயனுக்கு வாழையையும், சமாதிநிலை
இன்பத்திற்கு மாம்பழத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டிற்குத்
திப்பிலியையும், மாம்பழத்தை சுகத்துக்கங்களுக்கும், தன் மனைவிக்கு
வீட்டில் விளையும் மாம்பழத்தையும், பலாப்பழத்தையும்; மாற்றான் மனைவிக்குப்
புளியம் பழத்தையும், ஈச்சம் பழத்தையும் ஒப்பிட்டு மறைபொருளாகக் கூறியுள்ளார்.
வேள்வி வளர்க்கும் குச்சியாகவும் (சமித்து), நியதி உடையவர்களுக்கு ஒப்பாகவும் -
ஆல்,அரசு, அத்தி தாவரங்களையும்
பூசைக்குரிய புனித பொருளாக - மஞ்சள், தர்ப்பை
வழிபாட்டு தாவரமாக - நெல், அருகம் புல்
தூப வழிபாட்டு பொருட்கள் - சந்தனம், அகில், குங்குமம், கற்பூரம்
வழிபாட்டு சாந்து - சந்தனம், கற்பூரம், குங்குமம்
தாவரத்தால் பெயர் பெற்ற ஊர்கள் - ஆலம், தில்லை, தேவதாரு
இறைவனின் முகத்தோற்றம் - குங்கும், செவ்வரத்தை, தாமரை தாவரங்களை
கூறுவதுடன்
சிவலிங்கம் - அரசமரம், வில்வ மரம், அரிசி, அரிசி அன்னம்
அத்தி       - மரம்-ஆதார எலும்பிற்கும், பக்குவப்பட்ட நிலைக்கும்;
அத்திப் பழத்தை - வினைபயன்அத்தி விதை - கருமுட்டை
அரசமரம்   - சிவலிங்கம்
ஆம்பல்     - அறியாமை
ஆலம்      - விதை - உயிர் அணு, நிற்குண பிரம்மம், காய் - குண்டாலம்
எட்டி       - முதுமை, பொதுமகளிர், சமாதி நிலை, அறம் செய்யாதவர்கள் போல்                                                                              தோற்றம், உலக இன்பத்தால் ஏற்படும் துன்பம்
எள்         - அளவையும், கால அளவை குறிக்க
ஏலம்       - ஏழு ஆதாரங்கள்
கரும்பு      - இளமை, சாறு - உருவத்தோற்றம்
கமுகு      - அமுது
கல்ஆல்     - உபதேசத்திற்கு ஏற்ற இடம்
களா        - பெண்களின் சாந்து பொட்டு
கற்பூரம்     - தோன்றி மறையும் மனித வாழ்வு
கிஞ்சுகம்    - வாயிதழ்
குமட்டி பழம்- ஆனந்தம்
குவளை     - கண்கள்
கொட்டி     - அறிவு
சூரை       - துன்பம்
தண்டலை   - இறைவியின் தோற்றப் பொலிவுக்கு
தாமரை     - இறைவனின் முகம், கால், கண், கை, நிறம், பிராணவாயு தலையில்
                                        நிறுத்துமிடத்தைக் குறிக்கவும், உறைவிடம், உலக இயக்கம், உயிர்மூச்சு,மூலாதாரம்,                                            கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சு, தொண்டைக்குழி, புருவநடு,நாதவிந்து, உணர்வுகள்,
                                        அண்ட வெளி பொருட்கள், வண்ணத்திற்கும்,கருவிலிருந்து வெளிவரும் பாதம்.
தில்லை     - கூத்து, வனம் - வாழ்விடம்
தென்னை   - குரும்பை - இறைவியின் கொங்கைக்குஇளநீர் - படையற் பொருள்,
நாவல்      - அபானனும் பிராணனும், கூடுகின்ற நிலை
நெய்தல்    - சிவபெருமானின் ஐந்துவித ஆற்றலுக்கு ஒப்பிட்டுள்ளார்.
நெருஞ்சில்  - நெறி தவறிய வாழ்க்கை
நெல்               - வளர்ச்சி - காய சத்தி அடையும் வழி, வழிபாடு, அரிசியும், அரிசி சோறும்
                                      வழிபாடும் சிவலிங்கம்.
நெல்லி     - தவநெறி வெளிப்பாடு,
பஞ்சு       - இறைவனின் ஒளி,
பருத்தி      - பரஞ்சோதி சுடர், வழிபாட்டின் உச்ச நிலை
பனை       - வைராக்கியத்திற்கான முதுகு தண்டு, வீடுபேற்று, பனை ஓலையை
              மந்திர ஒலையாக குறிப்பிடுகின்றார்.
பாங்கர்     - சிரசில் ஏற்படும் ஒளியை பாங்கர் மலருக்கு ஒப்பிட்டுள்ளார்.
பாசி        - தெளிவற்ற மனநிலை, மயக்க உறவுகள்
பிரம்பு      - யோகிக்கு அடையாளம் (யோக தண்டம்)
புளி         - புளியம் பழம் ஓடு - பற்றற்ற நிலைக்கு, பார்த்ததும் எச்சில் ஊறுவது
புன்னை     - சிவகதி
பொற்பூவை - இறைவியின் தோற்றம்
மஞ்சள்     - சமாதி அமைக்க
மா         - தளிர் - சிவ ஒளி; மாம்பழம் - தவத்தின் வெற்றி,
மிளகு       - அனைத்து வியாதிகளுக்கும் ஒரே தாவரமாக மிளகை குறிப்பிட்டுள்ளார்.
முஞ்சில்    - சமாதிக்காக அமைக்கப்படும் நில அறை, நாணலின் அழிவற்ற                                                                              தன்மையைப் பிரணவமந்திரத்தால் உடல் அழியாத தன்மையை                                                                       ஒப்பிடுகின்றார்.
மூங்கிலை  - மூங்கிலின் முளைக்குருத்து - மணதிற்கும், முக்கலைகளுக்கும்
வஞ்சி      - இறைவியின் மென்மையான உடல்
வன்னி      - சுடர், அக்னிதேவன், நெருப்பு, வேள்வித்தீ, மந்திர எழுத்து
வாழை     - இன்பம், அமுதம், அழியாத் தன்மை
வில்வம்    - சிவலிங்கம், சமாதிக்கு
விளா       - மனித உடல்
வேம்பு      - வைராக்கியம், பொது மகளிர் உடல், உயிர் நாடி, சத்து சித்து.
வேய்       - இறைவியின் வளைந்தத் தோள்
இவ்வாறு மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும்
தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில்
86தாவரங்களைப் பதிவு செய்திருக்கின்றார்.

இவ்வாறு பதிவு செய்துள்ள தாவரங்களை அடையாளம் கண்டு, அதை
அடையாளம் காட்டும் பணி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம்
பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள்,
தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியனவும் இந்நூலில்
விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன




சிறுதானயத் தாவரங்கள்




புத்தக ISBN – 978-93-83924-51-9
விலை ரூ – 400
பக்கம் - 496



சிறுதானியங்களும் உணவுவகைகளும்



புத்தக ISBN – 978-93-83924-52-3
விலை ரூ – 200
பக்கம் - 228

No comments:

Post a Comment